ஒரு வாசகர் தன்னுடைய கடிதத்தில் Even Homer Nods என்ற வார்த்தைகளைக் குறிப்பிட்டிருக்கிறார். அப்படி என்றால் என்ன?
ஹோமர் என்பவர் கிரேக்க நாட்டில் கி.மு. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக
கருதப்படும் பிரபலமான கவிஞர். காவியங்களாகக் கருதப்படும் இலியட், ஒடிஸி
போன்றவற்றை எழுதியவர். ஹொரேஸ் என்பவர் ஹோமரின் நூலில் ஒரு தவறைக்
கண்டுபிடித்தார். கொலை செய்யப்பட்ட ஒரு கதாபாத்திரம் பின்னொரு பகுதியில்
உயிரோடு இருப்பதுபோல் காட்டப்பட்டுள்ளது. இதுபற்றிக் குறிப்பிடும்போது
லத்தீனில் ஒரு வாக்கியத்தை வெளிப்படுத்தினார் ஹொரேஸ். அதன் பொருள் ‘மகாகனம்
பொருந்திய ஹோமர் கூட தலையசைக்கிறார்’ என்பது. இங்கே தலை அசைவு என்பது
தூங்கிவிழும் தலையை குறிக்கிறது. ‘யானைக்கும் அடி சறுக்கும்’ எனும் தமிழ்
பழமொழியின் பொருளில் பொதுவாக இது பயன்படுத்தப்படுகிறது.
கீழே சில ஆங்கிலப் பழமொழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கான தமிழ்ப் பழமொழிகளை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று பாருங்கள்.